இலஞ்சம் வாங்கியபோது சிக்கிய பொலிஸ் பொறுப்பதிகாரி

Date:

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி 5 இலட்சம் ரூபா இலஞ்சம் பெறமுற்பட்ட போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் நேற்று (21) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இலஞ்சம் கோருவதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து நேற்றைய தினம் பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு வருகைதந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குறித்த பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஜந்து இலட்சம் ரூபா இலஞ்சம் பெற முற்பட்ட போது கைது செய்துள்ளனர்.

காணி விடயம் ஒன்று தொடர்பாக குறித்த இலஞ்சம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைதுசெய்யப்பட்ட பொறுப்பதிகாரி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அவரை இன்று (22) வவுனியா நீதிமன்றில் முற்றப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

spot_imgspot_img

More like this
Related

யாழில் 14 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய 27 வயது இளைஞன் கைது!

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 14 வயதுச்...

மிட்செல் ஸ்டார்க்கின் வேகத்தில் 64 ரன்களுக்கு சுருண்டது பங்களாதேஷ் அணி

அவுஸ்​திரேலியா - பங்களாதேஷ் அணி​கள் இடையி​லான கடைசி மற்​றும் 2வது டெஸ்ட்...

யாழ் ஊர்காவற்றுறை வீதியில் விபத்து !

யாழ்ப்பாணம் -  ஊர்காவற்றுறை பிரதான வீதியில் வேகமாகச் சென்ற கார் ஒன்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்