Pagetamil
இலங்கை

ஜேவிபிக்கு கூட்டணி அமைக்கும் எண்ணம் இல்லையாம்!

மக்கள் நிராகரித்த எந்தவொரு கட்சியுடனும் கூட்டணியை அமைத்து, உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்கும் எண்ணம் தேசிய மக்கள் சக்திக்கு இல்லையென மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஊழல் இல்லாத தேசிய சீர்திருத்த திட்டத்தை தொடர ஒரு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

தனி ஒரு கட்சியாக தேசிய மக்கள் சக்தி தெளிவான மற்றும் முன்னணி வெற்றியைப் பெற்றுள்ளது. இது சிறப்பு வாய்ந்தது. அதிகாரங்களை நிறுவுவதற்கு சுயாதீன குழுக்களுடன் இணைந்து செயல்பட தேசிய மக்கள் சக்தி தயாராக உள்ளது.

ஆனால் வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட பிற அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைக்காது. முன்னணி கட்சியாக, எங்களுக்கு ஆட்சி செய்ய உரிமை உண்டு.

தேசிய மக்கள் சக்தி மீதான நம்பிக்கையை மக்கள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

புளொட் நெடுமாறனுக்கு நீதிபதி இளஞ்செழியன் விதித்த மரணதண்டனையை இரத்து செய்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்!

Pagetamil

வட மாகாணத்தின் புதிய பிரதம செயலாளர் நியமனம்!

Pagetamil

வெள்ளவத்தையில் சந்தேகத்திற்கிடமான துப்பாக்கி மீட்பு!

Pagetamil

வங்கிக் கணக்கு திறக்கவும் TIN அவசியம்!

Pagetamil

கள்ளமண் ஏற்றிய டிப்பரை சுட்டுப்பிடித்த பொலிசார்

Pagetamil

Leave a Comment