சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள கைதிகள் நேற்று முன்தினம் (14) இலங்கையின் மிகப்பெரிய பால் சோறு தயாரித்தனர்.
சிறைச்சாலை சமையலறையில் பணிபுரியும் 50 கைதிகளின் உதவியுடன், 400 கிலோகிராம் பச்சை அரிசி மற்றும் 705 தேங்காய்களைப் பயன்படுத்தி மிகப்பெரிய புத்தாண்டு உணவு தயாரிக்கப்பட்டது. அதனுடன், 60 கிலோ வெங்காயம், 12 கிலோ காய்ந்த மிளகாய், 7 கிலோ பச்சை மிளகாய், தலா 10 கிலோ தக்காளி மற்றும் தேசிக்காய், 30 கிலோ திரவ உப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி பாற் சோறு தயாரிக்கப்பட்டது.
வெலிக்கடையில் உள்ள கிட்டத்தட்ட 3,300 ஆண் மற்றும் பெண் கைதிகள் இந்த பண்டிகை உணவைப் பகிர்ந்து கொண்டனர், ஒவ்வொருவருக்கும் 225 கிராம் பால் சோறு வழங்கப்பட்டது.
சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஆணையர் காமினி பி. திசாநாயக்கவின் கூற்றுப்படி, நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள சுமார் 30,000 கைதிகளுக்கு பால் சோறு தயாரிக்கப்பட்டது, இது சிறைகளுக்குப் பின்னால் ஒற்றுமை மற்றும் பாரம்பரியத்தின் அரிய தருணத்தைக் குறிக்கிறது.
பால் சோறு தயாரிப்பதைத் தவிர, நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் புத்தாண்டு சடங்குகள் கடைபிடிக்கப்பட்டன, மேலும் ஏப்ரல் 16 ஆம் திகதி கைதிகளுக்கு எண்ணெய் தேய்க்கும் நிகழ்வும் திட்டமிடப்பட்டுள்ளன.




