தேர்தல் வாக்குறுதியின்படி பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும்: பிரதமர் ஹரிணி

Date:

‘வளமான நாடு மற்றும் அழகான வாழ்க்கை’ என்ற தொலைநோக்குப் பார்வையைப் பின்பற்றும் தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் எதிர்காலத்தில் ஒழிக்கப்படும் என்று பிரதமர்  ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தின் முசலி தேர்தல் பிரிவில் உள்ள சிலாவத்துறை பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவது தொடர்பாக அமைச்சரவையால் ஏற்கனவே ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி, எதிர்காலத்தில் இந்தச் சட்டத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் கூறினார்.

எந்தவொரு சூழ்நிலையிலும் மக்கள் மதம் அல்லது இனத்தின் அடிப்படையில் எந்த வகையான ஒடுக்குமுறைக்கும் ஆளாக மாட்டார்கள் என்றும், அரசாங்கம் ஒருபோதும் இனவெறி மனநிலையுடன் நெருக்கடிகளைப் பார்க்காது என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய மேலும் வலியுறுத்தினார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வவுனியா நகரில் முதியவரின் சடலம் மீட்பு

வவுனியா நகரில், கொறவப்பொத்தானை வீதியில், பெரிய பள்ளிவாசலுக்கு அருகாமையில் முதியவர் ஒருவரின்...

போதைப்பொருளுடன் சிக்கிய மீன்பிடி படகு

தெற்கு கடலில் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையின் போது, ​​பெருமளவு போதைப்பொருட்களை...

ஒரு சில கொடுங்கோலர்களால் உலகம் நாசமாகிறது: ட்ரம்பை மறைமுகமாக சாடிய போப்!

போர்களுக்காக பில்லியன் கணக்கில் செலவழிக்கும் தலைவர்களை போப் கடுமையாகச் சாடியதோடு, "ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்