நடிகர் ஸ்ரீயின் உடல்நிலை குறித்த வதந்தி: தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு விளக்கம்

Date:

நடிகர் ஸ்ரீயின் உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு விளக்கம் அளித்துள்ளார்.

சில நாட்களாக ஸ்ரீயின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் வெளியான வண்ணம் இருந்தன. ஸ்ரீயின் இந்த நிலைக்கு காரணம் அவருக்கு திரையுலகில் முறையான சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறினார்கள். இதனை முன்வைத்து பலரும் ‘இறுகப்பற்று’ தயாரிப்பாளர்களில் ஒருவரான எஸ்.ஆர்.பிரபுவை கடுமையாக சாடினார்கள்.

இந்தச் சர்ச்சை தொடர்பாக தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, “ஸ்ரீயின் உடல்நலம் மற்றும் வாழ்க்கை பற்றி நாங்கள் உண்மையிலேயே அக்கறை கொண்டுள்ளோம். நாங்கள் உட்பட அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நீண்ட காலமாக தொடர்பு கொள்ள முயன்று வருகிறோம். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இது குறித்து ஏராளமான ஊகங்கள் பரவி வருகின்றன.

ஆனால், ஸ்ரீயை தொடர்பு கொண்டு அவரை மீண்டும் நல்ல ஆரோக்கியத்திற்குக் கொண்டு வருவதே முதல் முன்னுரிமை. அதை அடைய யாராவது எங்களுக்கு உதவ முடிந்தால் மிகவும் நன்றி” என்று தெரிவித்துள்ளார். இந்தப் பதிவின் மூலம் ‘இறுகப்பற்று’ தயாரிப்பு நிறுவனத்தின் மீது எழுந்த குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்பது தெளிவாகிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

‘வாயை மூடிப் பேசவும்’: தமிழரசின் சித்திரை புத்தாண்டு தீர்மானம் இதுதான்!

சித்திரை புத்தாண்டில் இருந்து இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்குள் இருக்கக் கூடிய...

மீனவரை சித்திரவதை செய்த கடற்படை மீது நடவடிக்கை இல்லையா?

கடற்படையினரால் கணவரான மீனவரை முழங்காலில் இருத்தி அடித்து சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம்...

புகையிரதம் மோதி ரஷ்ய யுவதி பலி

பெலியத்தாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த விரைவு ரயில் மோதியதில் 23...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்