பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக்கோரி யாழில் கையெழுத்து

Date:

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரி யாழ்ப்பாணத்தில் கையெழுத்துக் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

மக்கள் பேரவைக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று காலையில் இப் போராட்டம் நடைபெற்றது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டுமெனக் கோரி மக்கள் பேரவைக்கான இயக்கம் நாடு முழுவதும் கையேழுத்துப் பெறுகின்ற போராட்டத்தை நடாத்தி வருகின்றது.

இதன் தொடராக யாழ்ப்பாணத்திலும் கையெழுத்து பெறும் போராட்டத்தை இன்று மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆட்சிக்கு வர முன்னர் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டுமெனக் கோரி வந்த ஜேவிபியினர் இப்போது அந்தச் சட்டத்தை நீக்காமல் இருப்பதையும் கண்டித்துள்ள மக்கள் பேரவைக்கான இயக்கம் இந்தச் சட்டம் நீக்கப்படும் வரை தெடர்ந்தும் போரட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வெருகல் ஆற்றில் மாயமான சகோதரர்களின் சடலங்கள் மீட்பு!

மகாவலி ஆற்றின் வெருகல் ஆறு பாலத்திற்கு அருகில் நீராடச் சென்ற தந்தை...

ஈரான் மீது கிடுக்குப்பிடி; இஸ்ரேலுக்கு தாராளம்: அணுஆயுத விவகாரத்தில் ஏன் இரட்டை அணுகுமுறை?

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, ஈரானின் அணுசக்தித் திட்டம் கடுமையான சர்வதேசக் கண்காணிப்பு,...

வடகொரிய அணு ஆயுத உற்பத்தியில் தீவிர அதிகரிப்பு!

வட கொரியா தனது அணு ஆயுத உற்பத்தித் திறனில் 'மிகவும் தீவிரமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்