டிப்பரில் கஞ்சா கடத்தல்: சுட்டுப்பிடித்தது பொலிஸ்!

Date:

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் ரக வாகனம் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் , மற்றுமொருவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

கொடிகாமம் திசையிலிருந்து பருத்தித்துறை நோக்கி சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிய டிப்பர் வாகனம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, இன்று (02) காலை பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உண்டியல் சந்தியில் பகுதியில் வாகனம் ஒன்றினை பொலிஸார் நிறுத்த முற்பட்டபோது , பொலிசாரின் கட்டளையை மீறி வாகனத்தை சாரதி தொடர்ந்து செலுத்தி சென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அதனைத் பின்தொடர்ந்த பருத்தித்துறை பொலிஸார், வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிகண்டி பகுதியில் வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, டிப்பர் வாகனத்தின் சாரதி மற்றும் அதன் உதவியாளர் வாகனத்தை கைவிட்டு, கறுப்புநிற பைகள் சிலவற்றை எடுத்துக் கொண்டு ஓடியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதன் பின்னர் குறித்த டிப்பர் வாகனதை சோதனையிட்ட போது, சந்தேகநபர்கள் பயணித்த முன்பகுதியில் அங்குமிங்கும் கஞ்சா இருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளது. சாரதி கஞ்சாவுடன் தப்பியோடியதாக கருதப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து பருத்தித்துறை, மந்திகை வைத்தியசாலையில், துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் நபர் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த நபர், மேற்படி டிப்பர் வாகனத்தின் உதவியாளர் என தெரிய வந்துள்ளது.

சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளதோடு, அவர் தற்போது பொலிஸ் பாதுகாப்புடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

கைதான சந்தேகநபர் 19 வயதான, தர்மபுரம் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மச்சாளை கட்டிவைத்து வல்லுறவுக்குள்ளாக்கிய மன்மதராசா, அப்பாவுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

கொலை மிரட்டல் விடுத்து 20 வயதுப் பெண்ணை வலுக்கட்டாயமாகப் பாலியல் வன்கொடுமை...

15 தையல்களுடன் வைத்தியசாலையில் இலங்கையர்: கடற்கொள்ளையர் என இந்திய மீனவர்களால் பிடிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி!

தமிழக மீனவர்களால் இலங்கை மீனவர் ஒருவர் சிறைப்பிடிக்கப்பட்டு, தாக்கப்பட்ட காணொளிகள் சக...

இலங்கை கிரிக்கெட் தலைமை மாற்றம் பற்றி விளையாட்டு அமைச்சரின் பதில்!

இலங்கை கிரிக்கெட் சபையில் தலைமை மாற்றம் ஏற்படக்கூடும் என வரும் செய்திகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்