பண்டாரவளை, பூனாகல பகுதியில் மண்மேடு இடிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
அணை கட்டும் பணிக்காக குழி வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மேலே இருந்த மண் குவியல் எதிர்பாராத விதமாக சரிந்து விழுந்ததில் குறித்த மரணம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (23) அதிகாலை நேரத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மண்ணுக்குள் சிக்கிய இளைஞனை மீட்டு பண்டாரவளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் அதற்குள் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
உயிரிழந்தவர் பண்டாரவளை, துல்கொல்ல பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஆவார்.
இந்த சம்பவம் குறித்து பண்டாரவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




