அன்பின் முத்தங்கள் திருகோணமலையில் வெளியிடப்பட்டது

Date:

இன்று (22.02.2025 – சனிக்கிழமை) காலை 10.00 மணிக்கு “அன்பின் பாதை எண்ணம் போல் வாழ்க்கை” கலை இலக்கிய மன்றம் நடாத்தும் ஒரு சிறப்பு இலக்கிய நிகழ்வாக, வி. மைக்கல் கொலின் எழுதிய ‘அன்பின் முத்தங்கள்’ கவிதை நூல் அறிமுக விழா திருகோணமலை ஶ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய திருமண மண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் முதன்மை விருந்தினராக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிக செயலாளர் திரு. க. மகேசன், சிறப்பு விருந்தினராக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு. கே. குணநாதன், மற்றும் கௌரவ விருந்தினராக கிழக்கு மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் திரு. நா. மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும், எழுத்தாளர் மற்றும் ஊடகவியலாளர் திருமலை நவம் அழைப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

நிகழ்வின் முக்கிய அம்சமாக கவிஞர் சு. சிவசங்கரன் நூல் நயவுரை நிகழ்த்தினார்.

சமூக, நிர்வாக, வர்த்தக மற்றும் கல்வித் துறைகளைச் சேர்ந்த பல்வேறு பிரமுகர்கள் சிறப்புப் பிரதிகளைப் பெற்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எண்ணெய் உற்பத்தியை குறைத்த ஈரான்

அமெரிக்காவின் ஹோர்முஸ் ஜலசந்தி முற்றுகையால் ஏற்பட்ட அதிகரித்து வரும் சேமிப்பு நெருக்கடியைச்...

கிளிநொச்சியில் பிளாஸ்டிக் துப்பாக்கியுடன் மே தினத்திற்கு வந்தவர் கைது!

மே 1 அன்று கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகே நடைபெற்ற மே...

மனவைி விவகாரத்து கோரியதனால்  கோபத்தில்  தென்னைகளை வெட்டி வீழ்த்திய கணவன்

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் மூன்று பெண் பிள்ளைகளின் தாயான பெண்ஒருவர் தனது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்