திருகோணமலை புகையிரத நிலையத்தை துப்பரவு செய்த சாரணர்கள்

Date:

சாரண இயக்கத்தின் தந்தை பேடன் பவல் பிரபுவின் பிறந்த தினத்தை முன்னிட்டு, திருகோணமலை மாவட்ட சாரண சங்கத்தினால் இன்று (22) திருகோணமலை பிரதான புகையிரத நிலையத்தில் சிறப்பான சிரமதான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

நிகழ்வு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், இலங்கை சாரண சங்கத்தின் ஆணையாளர், மாவட்ட சாரண ஆணையாளர், சாரண சங்க உறுப்பினர்கள் மற்றும் சாரண மாணவர்கள் ஆகியோரின் பங்குபெற்றலுடன் ஆரம்பமானது.

தேசியக்கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டு, மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது.

சாரணத் தந்தை பேடன் பவல் பிரபுவின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அதன் பின்னர் சாரண மாணவர்களின் பங்களிப்புடன் புகையிரத நிலையம் முழுவதும் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.

இச்சிரமதானம், சாரணர்கள் சமூக சேவையை ஊக்குவிக்கும் அடையாளமாகவும், சாரண இயக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நிகழ்வாகவும் அமைந்தது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

புகையிரத திணைக்கள வேலைநிறுத்தம் வாபஸ்

நேற்று நள்ளிரவில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்த லோகோமோட்டிவ் இயக்க பொறியாளர்கள் சங்கத்தால் திட்டமிடப்பட்ட...

‘இதற்கு சட்டத்தில் இடமில்லை’: இரண்டு பொலிசாரையும் பிணையில் விடுவித்த நீதிமன்றம்!

பொலிஸ் திணைக்களத்தின் நற்பெயரைப் பாதுகாப்பதற்கும், ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு முன்மாதிரியாக இருப்பதற்கும்,...

பாடசாலை வகுப்பறை கட்டடங்களில் அவசர கால வெளியேற்ற பாதை இன்மைக்கு  எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

அனர்த்தங்களின் போது மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு அவசர கால வெளியேற்றம் இன்றி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்