முன்னாள் மொரவெவ பிரதேச சபை உப தவிசாளரும், மனித நேயம் மிக்க நபருமான சாலிய ரத்நாயக்க, யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று (19.02.2025) இரவு 8.45 மணியளவில், மொரவெவ சந்தியில் உள்ள தனது வீட்டிற்கு வந்த யானையை துரத்திய போது, யானை எதிர்பாராத விதமாக அவரை தாக்கியுள்ளது. இதன் போது, அவர் உயிரிழந்துள்ளார்.
இந்த மாதிரியான மனித உயிரிழப்புகளைத் தவிர்க்க, மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையிலான மோதல்களை குறைக்கும் திட்டங்களை அரசு முன்னெடுக்க வேண்டும் எனவும், பாதுகாப்பான மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு, எதிர்காலத்தில் இத்தகைய உயிரிழப்புக்கள் மாறுபட நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.



