அண்மையில் ஊடகங்களில் வெளியான சர்ச்சைக்குரிய அறிக்கைகளை தொடர்ந்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்குமாறு கட்சியால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி தெரிவித்துள்ளார்.
கடந்த 16ம் திகதி கெசல்வத்த, கிம்பதவில் நடைபெற்ற ‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) நிகழ்ச்சியின் போது, செய்தியாளர்கள் அவரிடம் கேள்விகள் எழுப்பிய போது, “மன்னிக்கவும், கட்சியால் ஊடகங்களுக்கு பேச வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதால், நான் கருத்து தெரிவிக்க முடியாது” என பதிலளித்தார்.
இதன் மூலம், NPP உட்பட்ட உறுப்பினர்களுக்கு ஊடகங்களில் கருத்து தெரிவிப்பதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.



