குரங்கால் பதறும் ஜேவிபி அரசு

Date:

அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, குரங்கு சம்பவம் தற்போது முடிந்துவிட்டது என்றும், எதிர்க்கட்சியினர் குரங்கு சம்பவத்தை எப்போதும் நினைவுபடுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

தேசிய மின்சாரக் கட்டமைப்பை முடக்குவதற்கு குரங்கு ஒன்று காரணமாக அமைந்த சம்பவம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு கூறினார்.

பாணந்துறை துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட குரங்கு சம்பவம் எவ்வாறு மின் தடைக்குக் காரணமாக அமைந்தது என்றும், நாடு தழுவிய மின் தடையை ஒரு விலங்கு ஏற்படுத்தியது இதுவே முதல் முறையா என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கருணாநாயக்க, நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் கேள்வி எழுப்பினார்.

அரசாங்கத்தின் பிரதம கொறடா நளிந்த ஜயதிஸ்ஸ, மின்சார சபை, மின் அமைப்பில் உள்ள ஏற்றத்தாழ்வுக்கு ஒரு நிரந்தர தீர்வைக் காண முயற்சித்து வருவதாகக் கூறினார்.

“அமைப்பில் உள்ள ஏற்றத்தாழ்வுக்கு மின்சாரசபை ஒரு தீர்வைக் கண்டுபிடித்து வருகிறது. குரங்கு சம்பவம் இப்போது முடிந்துவிட்டது, அதை இங்கே எப்போதும் நினைவூட்ட வேண்டாம்” என்று அவர் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

நீதிக்கான ஓலம் – சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஒன்றிணையும் தமிழர் தரப்பு

கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் ஏனைய...

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை அவமதித்ததாக குற்றச்சாட்டு – போராட்டத்திற்கு அழைப்பு

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை களங்கப்படுத்தும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் அரச அதிகாரிகளுக்கு...

நீதியின் ஓலம் போராட்டத்திற்கு அனுமதியளித்த வலி கிழக்கு தவிசாளரிடம் பொலிஸ் தரப்பு விளக்கம் கோரியது

யாழ். செம்மணிப்பகுதியில் இடம்பெறும் நீதியின் ஓலம் 2 போராட்டம்  இனங்களுக்கிடையே அமைதியற்ற,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்