Pagetamil
இலங்கை

2021யில் காணாமல் போன துப்பாக்கி கண்டுபிடிப்பு

குளியாப்பிட்டி – இலுக்கேன பகுதியில் 2021ம் ஆண்டு அரசாங்க ஆயுதக் கிடங்கில் இருந்து காணாமல் போன T-56 ரக துப்பாக்கியுடன் கடற்படை வீரர் ஒருவர் இன்று (16) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

குளியாப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகளின் உதவியுடன் கடற்படை தலைமையகத்தின் விசேட அதிகாரிகள் குழு மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2021ம் ஆண்டு அரசாங்க ஆயுதக் கிடங்கில் இருந்து இந்த துப்பாக்கி காணாமல் போனது தொடர்பாக ஆரம்பத்திலிருந்தே பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், நீண்ட ஆய்வுகளுக்கு பிறகு தற்போது அது மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபருக்கு எதிராக அரச ஆயுத சட்டங்களின்படி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் உறுதியளித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காதலியை குத்திக்கொன்ற காதலன் சரண்!

Pagetamil

உளறல்களின் எதிரொலி: அர்ச்சுனாவிற்கு பாராளுமன்றத்தில் தற்காலிக தடை!

Pagetamil

கூடைப்பந்தாட்ட அணிக்கு தெரிவான திருக்குடும்ப கன்னியர் மட மாணவிகள்

Pagetamil

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு பாதுகாப்பு வழங்கியவர்களும் உடந்தையா?

Pagetamil

யாழில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களிடம் பணம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகனுக்கு விளக்கமறியல்!

Pagetamil

Leave a Comment