இணையத்தின் மூலம் “லிட்டில் ஹார்ட்ஸ்” என்ற போலிக் கணக்கை உருவாக்கி பணம் தருவதாகவும், “ஹார்மிண்டேஷன்” கணக்கின் மூலம் பணப்பரிசு வழங்குவதாகவும் கூறி, 29 இலட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மோசடி கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல்துறைப் பகுதியிலும், நரோவ்வலய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரம்ப பகுதிகளிலும் இடம்பெற்றுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நொச்சிகம பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான சேனாதிரகே துலான் மஹேஷித மற்றும் பலவியா பகுதியைச் சேர்ந்த 23 வயதான மாணிக்குகே சந்தருவன் சில்வா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் சேனாதிரகே துலான் மஹேஷித சமூக ஊடக ஆர்வலர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் இருவரும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். இந்த மோசடி தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவின் இணைய ஊடுருவல் மற்றும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.



