இன்று முதல் நாடு முழுவதும் மின்வெட்டு ஏற்படாது என மின்சக்தி வலு அமைச்சுc அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தற்போது நிலவும் பருவமழை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சிறப்பாக உயர்ந்துள்ளதால், நீர்மின் நிலையங்களின் உற்பத்தி திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், நாடு முழுவதும் மின்விநியோகத்தை பாதித்திருந்த நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் தொழில்நுட்ப கோளாறுகள் முற்றிலும் சரிசெய்யப்பட்டுள்ளன.
அத்துடன், மின்சார தேவையை நிரந்தரமாக பூர்த்தி செய்யும் வகையில், ஏனைய மின் உற்பத்தி நிலையங்களும் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளன. இதனால், மின்விநியோகத்தில் ஏற்படும் தடங்கல்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ச்சியான மின்சார சேவையை உறுதி செய்ய தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன எனவும் அமைச்சு அறிவித்துள்ளது.



