பிரபல ரவுடி இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்

Date:

பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினர் மண்டலகல போம்புகலகே சுமித் பிரியந்த இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டார்.

பல கடுமையான குற்றச்சாட்டுகளுக்காக இலங்கை பொலிஸாரால் தேடப்பட்டு வந்துள்ளார்.

குருவிட்ட பகுதியில் 5 மில்லியன் ரூபாய் பணம் பறித்தல், போதைப்பொருள் கடத்தல், மற்றும் மிரிஹானவில் கையெறி குண்டுகளை வைத்திருத்தல் போன்ற குற்றங்களில் இவர் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இக் குற்றச் சம்பவங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் போது, அவர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருந்தார்.

எனினும், பதில் பொலிஸ் மா அதிபரின் நேரடித் தலையீட்டுடன், விரிவான ஒருங்கிணைப்பின் மூலம், நேற்றைய தினம் (12) இரவு, பிரியந்த இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். இதனைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத்துறை அவரை பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எரிபொருள் நெருக்கடி: அரச ஊழியர்களுக்கு புதன் கிழமைகளிலும் விடுமுறை!

தற்போது நிலவும் எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அதனை எதிர்கொள்ளும் வகையில்...

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

‘தமிழ் சிறுகதைகளின் தடங்கள்’ என்ற நூலுக்காக எழுத்தாளர் ச.தமிழ்செல்வனுக்கு 2025-ம் ஆண்டுக்கான...

கியூபாவுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது, ஈரானுக்குப் பிறகு நடவடிக்கை சாத்தியம்: டிரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா விரைவில் கியூபாவுடன் ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்