பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினர் மண்டலகல போம்புகலகே சுமித் பிரியந்த இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டார்.
பல கடுமையான குற்றச்சாட்டுகளுக்காக இலங்கை பொலிஸாரால் தேடப்பட்டு வந்துள்ளார்.
குருவிட்ட பகுதியில் 5 மில்லியன் ரூபாய் பணம் பறித்தல், போதைப்பொருள் கடத்தல், மற்றும் மிரிஹானவில் கையெறி குண்டுகளை வைத்திருத்தல் போன்ற குற்றங்களில் இவர் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இக் குற்றச் சம்பவங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் போது, அவர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருந்தார்.
எனினும், பதில் பொலிஸ் மா அதிபரின் நேரடித் தலையீட்டுடன், விரிவான ஒருங்கிணைப்பின் மூலம், நேற்றைய தினம் (12) இரவு, பிரியந்த இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். இதனைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத்துறை அவரை பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.



