ரயிலில் மோதி ஒருவர் பலி

Date:

பதுளை – எல்ல நானு ஓயா ஒடிசி ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நானு ஓயாவிலிருந்து பதுளை நோக்கி வந்த ஒடிசி ரயில், ஹாலி எலைக்கும் பதுளைக்கும் இடைப்பட்ட பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, குறித்த நபர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவவத்தை தொடர்ந்து, உயிரிழந்த நபரின் சடலம் பதுளை ரயில் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த நபர் இதுவரை யார் என அடையாளம் காணப்படவில்லை எனவும், அவருக்கு சுமார் 40 வயது இருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்துக்கான காரணங்களை கண்டறிய பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்திற்கான உண்மைக் காரணம் விரைவில் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

இளம்பெண்ணிடம் ஈவ்டீசிங்: தவெக ஒன்றிய செயலாளர் கைது​

திரு​வாரூர் புதிய பேருந்து நிலை​யத்​தில் இளம் பெண்​ணிடம் ஈவ்​டீசிங் செய்த தவெக...

எரிபொருள் இறக்குமதி செலவு குறைகிறது!

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் உச்சத்தை எட்டிய எரிபொருள் இறக்குமதி செலவுகள்...

கனடா ஆசைகாட்டி மோசம் செய்யப்பட்ட இளம் பிசியோதெரப்பிஸ்ட்: ஐ.டி இளைஞனின் அதிர வைக்கும் காதல் குற்றங்கள்!

தெல்தெனிய மாவட்ட மருத்துவமனை வாகன நிறுத்துமிடத்தில் ஒரு காரில் மீட்கப்பட்ட சடலம...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்