10 வயது சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற 15 வயது சிறுவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவின் உரும்பிராய் பகுதியில், 10 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற 15 வயது சிறுவன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை (10) இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் துஸ்பிரயோகத்திற்குள்ளாகவிருந்த சிறுமியை மீட்கப்பட்டு, மேலதிக வைத்திய பரிசோதனைக்காக குறித்த சிறுமி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



