மின்சார செலவை குறைக்கும் திட்டம் – ஜனாதிபதி அறிவிப்பு

Date:

மின்சாரக் கட்டணங்களில் நிலையான விலையை வழங்கும் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார். இதன் மூலம், மின்சார செலவுகளை கட்டுப்படுத்தி, மக்களின் பொருளாதாரப் பாரத்தை குறைப்பதே அரசின் முக்கிய நோக்கமாகும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த திட்டத்திற்கான முக்கிய அம்சமாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பயன்பாடு அதிகரிக்கப்படவுள்ளதாகவும், எதிர்காலத்தில் மின்சாரத் துறையில் செலவினங்களை குறைத்து நிரந்தரமாக மின்சாரக் கட்டணங்களை பொதுமக்கள் ஏற்கத்தக்க முறையில் வைக்க அரசாங்கம் கடுமையாக செயல்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டின் பொருளாதாரத்தை புதிய நிலைக்கு கொண்டு செல்ல அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், நீடித்த முன்னேற்றத்தைக் கொண்டுவரும் வகையில் எரிசக்தித் துறையில் மறுசீரமைப்பு முயற்சிகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், மின்சாரத் துறையில் மேற்கொள்ளப்படும் இந்த திட்டம் எதிர்காலத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்று ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். இந்த அறிவிப்பு, கொழும்பில் நடைபெற்ற ஏற்றுமதி விருது வழங்கும் விழாவின் போது ஜனாதிபதி உரையாற்றியபோது வெளியிடப்பட்டது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழக தேர்தலில் யாரும் எதிர்பாராத திருப்பம்.. தி.மு.க.வுக்கு பெரும் பின்னடைவு… த.வெ.க முன்னிலையில்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர், துணை முதல்வர் உட்பட திமுக அமைச்சர்கள்...

முல்லைத்தீவில் இரு மீனவர்கள் மாயம்

முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல்...

யாழில் பியர் போத்தலால் தாக்கப்பட்டவர் பலி

யாழ்ப்பாணத்தில் பியர் போத்தலால் தாக்கப்பட்டதில் 36 வயதுடைய நபர் ஒருவர் கொல்லப்பட்டதாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்