நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறின் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் மின் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
மின் விநியோக தடை ஏற்பட்ட பகுதிகளை மீண்டும் வழமைக்கு கொண்டு வருவதற்கான தேவையான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக மின்சாரசபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதனிடையே, நாடு முழுவதும் மின் விநியோகத்திற்குத் தேவையான தொழில்நுட்பப் புதுப்பிப்புகள் மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் தொடரும் எனவும், மின்சாரத் தட்டுப்பாட்டினால் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை குறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் மின்சார சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



