சிலியில் காட்டுத் தீ – 60 பேர் கைது

Date:

தென்னமெரிக்க நாடான சிலியின் நுபல், மவுலி மாகாணங்களில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ தீவிரமாக பரவி வருகிறததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இக் காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்புப் படையினர் மற்றும் பாதுகாப்பு பிரிவுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றதாகவும், 15க்கும் மேற்பட்ட இடங்களில் தீ வேகமாக பரவியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச் சூழ்நிலையால், நுபல் மற்றும் மவுலி மாகாணங்களில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டு, மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த காட்டுத்தீ திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்பட்டு, சந்தேகத்தின்பேரில் 60 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசாங்கத்தினால் தீயணைப்பு நடவடிக்கைகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Share post:

spot_imgspot_img

More like this
Related

இலங்கையின் முன்னணி பதிப்பாளர் கொடகே காலமானார்

கோடகே பதிப்பகத்தின் நிறுவனர் தேசபந்து சிறிசுமன கொடகே நேற்று (29) காலமானார். அவர்...

எரான் விக்ரமரட்னவை கட்சியிலிருந்து விலகக்கோருகிறது ஐக்கிய மக்கள் சக்தி!

இலங்கை கிரிக்கெட்டின் உருமாற்றக் குழுவின் தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள்...

கடன் பணம் மாயம்: பாராளுமன்றத்தில் விளக்கமளிக்கவுள்ள ஜனாதிபதி

வியாழக்கிழமையன்று பொது நிதிக் குழுவின் (COPF) முன் ஆஜராகத் தன்னால் இயலாது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்