கடலில் நீராடிக் கொண்டிருந்த மாணவன் மாயம் – தேடுதல் நடவடிக்கைகள் தீவிரம்

Date:

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது பாடசாலை மாணவன் காணாமல்போன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய தினம் (08) நண்பகல், கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது அலைகளின் வேகத்தால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், மாணவன் காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் போன மாணவர், காத்தான்குடி நூறாணியா வித்தியாலயத்தில் தரம் 9ல் கல்வி கற்கும் சாமில் சனாஹி என்பவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்ததும், கடற்படையினர், மீன்பிடி துறைமுக அதிகாரிகள், மற்றும் பொலிஸார் இணைந்து மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை மாணவனை அடையாளம் காண முடியவில்லை என்பதோடு, கடலில் நிலவும் வானிலை காரணமாக தேடுதல் பணிகள் சிரமத்துக்குள்ளாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

Share post:

spot_imgspot_img

More like this
Related

“கஜானாவில் பணம் இல்லை என கூறி வாக்களித்த மக்களை ஏமாற்றி திசைதிருப்பாதீங்க”: மு.க.ஸ்டாலின்

“எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க… உங்களுக்கு...

பெரியார் திடலில் கி.வீரமணியை சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் விஜய்

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை நேரில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்