அங்கொடை சந்தியில் தீ பரவி பெரும் சேதம்

Date:

அங்கொடை சந்தியில் உள்ள கார் உதிரிப் பாகங்கள் பழுதுபார்க்கும் கடையில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த கடையில் ஏற்பட்ட தீயானது அருகிலிருந்த மேலும் இரண்டு கடைகளுக்கும் பரவியதில் இரு கட்டிடங்கள் முழுவதும் எரிந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

தீயணைப்பு வாகனங்கள் வருவதற்கு முன், அப்பகுதி மக்கள் தீயை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டபோதிலும், தீ வேகமாகப் பரவி பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருந்தது.

தற்போது, கோட்டே மாநகர சபையிலிருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன.

இந்த விபத்தில் ஒரு வீடும் ஒரு கடையும் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீ பரவல் சம்பவத்திற்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில் விசாரணைகள் தொடருகின்றன.

spot_imgspot_img

More like this
Related

சவுதி அராம்கோ ஹெலிகாப்டர் விபத்து: 14 உயிர்களை காவுகொண்ட பேரதிர்ச்சி

சவுதி அரேபியாவில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக...

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திய நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரும் யோசனையை அரசு பரிசீலனை

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கான...

முதியோர் கொடுப்பனவை மீள வழங்க சிறப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்

தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாத காரணத்தால் மாதாந்திர முதியோர் கொடுப்பனவை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்