ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் (SLMC) தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் M.S. நளீம், இன்று (8) காலை ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக சிலரால் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் மேற்கொண்டவர்களின் அடையாளம் மற்றும் தாக்குதலுக்கான காரணம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அரசியல் சர்ச்சையாக கருதப்படும் நிலையில், இது தொடர்பாக மேலும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




