தி/ உவர்மலை விவேகானந்த கல்லூரி பழைய மாணவர்கள் இணைந்து இன்று (08) இரத்ததான முகாமை ஏற்பாடு செய்துள்ளனர்.
கல்லூரி தினத்தை முன்னிட்டு, சமூகப்பணியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக இந்த முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

குருதி தான முகாமானது, மங்கள விளக்கேற்றலுடன், மதகுருமார், அதிபரின் உரையுடன் ஆரம்பமானது.
அதனைத் தொடர்ந்து பழைய மாணவர்கள் தங்களுடைய குருதியை கொடை செய்தனர்.
பலரும் இந்த மனிதாபிமான செயலில் ஈடுபட்டு, குருதி தேவையுள்ளவர்களுக்கு உதவ முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.




