செளத்பார் புகையிரத நிலைய வீதியை புனரமைக்க கோரிக்கை

Date:

மன்னார் மாவட்டம் செளத்பார் புகையிரத நிலைய வீதி பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி முற்றிலும் சேதமடைந்து காணப்படுவதால், அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளதாக தெரிவித்துவருகின்றனர்.

இந்த வீதியை புனரமைப்பதற்காக முன்பே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த போதிலும், பல்வேறு காரணங்களால் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்படாமல், ஒதுக்கப்பட்ட நிதி திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால், புகையிரத பயணிகள் மற்றும் சாந்திபுரம், செளத்பார் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இந்த பாதையை சரியாக பயன்படுத்த முடியாத நிலையில், தினசரி பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறான பின்னனியில் அவ் அப்போது வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் செய்யப்படும் சீராக்கும் பணிகளும் ஒழுங்கான முறையில் மேற்கொள்ளப்படுவதில்லை என பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இந்நிலையில், பயன்படுத்த முடியாத வீதியை சீரமைத்ததாக காட்டி அரச பணத்தை வீணாக்குவதை விடுத்து, வீதியை முறையாக புனரமைத்து தர வேண்டும் என அப் பகுதி மக்கள் உரிய அதிகாரிகளிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

நாமலுக்கு மீண்டும் விளக்கமறியல்!

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவை எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில்...

இலங்கை ஊடகவியலாளர் நம்பிக்கை நிதியம்: அரசியல் பிரமுகர்களிடம் திட்ட அறிக்கை கையளிப்பு

இலங்கையின் மூவின ஊடகவியலாளர்களின் நலனைக் கருத்திற்கொண்டு சிலோன் மீடியா போரத்தினால் முன்மொழியப்பட்டுள்ள...

தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு தமிழக அமைச்சர் ஷாஜகான் விஜயம்!

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்குத் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜஹான் நேற்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்