நாட்டின் நீர் கட்டணங்களை 10 முதல் 30 சதவீதம் வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
மின்சாரக் கட்டண குறைப்புடன் ஒப்பிடும் போது, நீர் கட்டணங்களையும் குறைப்பதில் தற்பொழுது கவனம் செலுத்தப்படுவதாக சபையின் பேச்சாளர் தெரிவித்தார்.
நீர் கட்டணம் குறைப்பு தொடர்பாக மதிப்பிடுவதற்கு குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. குழுவின் அறிக்கைகள் அடுத்த சில நாட்களுக்குள் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவருக்கு சமர்ப்பிக்கப்படும்.
சம்பிக்கப்பட்ட அறிக்கையை நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருக்கு தலைவர் அனுப்புவார். பின்னர் அமைச்சரவையின் அனுமதிக்கு அனுப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




