கொஸ்கொட பகுதியில் இருவர் மீது துப்பாக்கி சூடு நடத்த முயன்ற சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (5) துப்பாக்கி, ஒரு மெகசின் மற்றும் 9 தோட்டாக்களுடன் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக கொஸ்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரிடமிருந்து 5900 மில்லிகிராம் ஹெராயினையும் பொலிஸார் கைப்பற்றியதோடு, கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.




