அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்தியர்கள்

Date:

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 205 இந்தியர்கள், அமெரிக்க இராணுவ விமானத்தில் இன்று மதியம் 1 மணிக்கு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள குரு ராம் தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தில் இறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால், இவர்கள் கைதிகள் போன்று கையில் விலங்குகள் பூட்டப்பட்ட நிலையில், ஒரே ஒரு கழிப்பறை வசதியுடன் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளமை மனித உரிமை மீறலாகவே பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்வுக்கு பல்வேறு கோணங்களில் எதிர்வினைகள் எழுந்துள்ளன. குறிப்பாக, அமெரிக்கா இந்திய குடியேறிகளை இவ்விதம் அநாகரிகமான முறையில் நாடு கடத்தியதை இந்தியா எப்படி பார்க்கிறது? இதற்கு இந்திய அரசு கடுமையான பதிலடி கொடுக்குமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இந்த சம்பவம் இந்தியாவின் மரியாதைக்கும் தூய்மைக்கும் நேரடியான அவமானமாக பார்க்கப்படுகிறது. பஞ்சாப் மாநிலம் புலம்பெயர் இந்தியர்கள் விவகாரத் துறை அமைச்சர் குல்தீப் சிங் தலிவால், “இந்தியா இதை மிக முக்கியமாக எடுத்துக்கொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

மேலும், “இந்தியர்கள் அமெரிக்கா சென்றது தொழில் மற்றும் வாழ்வாதார தேடலுக்காகத்தான். அவர்களை இவ்வாறு அடிமைபோல கையில் விலங்குகள் பூட்டி அனுப்பியிருப்பது கேள்விக்குறியாகும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் 2வது முறையாக பதவியேற்றதிலிருந்து, குடியேற்றக் கொள்கைகள் மேலும் கடுமையடைந்துள்ளன. அவரது ஆட்சியில், சட்டவிரோத குடியேற்றங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இப்போது, இந்தியர்கள் உட்பட பல்வேறு நாடுகளின் குடியேறிகள், இந்த கொள்கையின் தாக்கத்தால் பாதிக்கப்படுகின்றனர்.

இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை அடுத்த வாரம் சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா இதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்துக் கொள்ளுமா, அல்லது இதை ஒரு சாதாரண விவகாரமாக கடந்து செல்லுமா என்பதுதான் அனைவரின் கவனமும் ஈர்க்கும் விடயம்.

இந்த 205 குடியேறிகளும் மிக மோசமான முறையில் அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் கைதிகள் போல் கட்டப்பட்டு, போதிய வசதிகள் இல்லாமல் இராணுவ விமானத்தில் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இது கண்டனத்திற்குரியதாக உள்ளதோடு, மனித உரிமை மீறல் என்றும் பார்க்கப்படுகிறது.

இந்தியாவுக்கு இது ஒரு பாரிய அவமானமாகவே கருதப்படுவதால், இந்திய அரசு இதற்கான சரியான பதிலடி கொடுக்குமா என்ற கேள்வியே பல தரப்பினரையும் பீடிக்கிறது.

spot_imgspot_img

More like this
Related

கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முன்வந்த ஒரே ஜனாதிபதி அனுரவாம்!

மட்டக்களப்பு, ஸ்ரீ மங்களாராமயவின் விகாராதிபதியான அம்பிட்டிய சுமனரத்ன தேரர், கிழக்கு மாகாண...

வாகன, தங்க கடன்களுக்கான புதிய கடன் கட்டுப்பாடுகள்: இன்று முதல் நடைமுறை!

நிதித்துறையின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கவும், அதிகப்படியான கடன் வழங்கலால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்கவும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்