அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்தியர்கள்

Date:

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 205 இந்தியர்கள், அமெரிக்க இராணுவ விமானத்தில் இன்று மதியம் 1 மணிக்கு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள குரு ராம் தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தில் இறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால், இவர்கள் கைதிகள் போன்று கையில் விலங்குகள் பூட்டப்பட்ட நிலையில், ஒரே ஒரு கழிப்பறை வசதியுடன் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளமை மனித உரிமை மீறலாகவே பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்வுக்கு பல்வேறு கோணங்களில் எதிர்வினைகள் எழுந்துள்ளன. குறிப்பாக, அமெரிக்கா இந்திய குடியேறிகளை இவ்விதம் அநாகரிகமான முறையில் நாடு கடத்தியதை இந்தியா எப்படி பார்க்கிறது? இதற்கு இந்திய அரசு கடுமையான பதிலடி கொடுக்குமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இந்த சம்பவம் இந்தியாவின் மரியாதைக்கும் தூய்மைக்கும் நேரடியான அவமானமாக பார்க்கப்படுகிறது. பஞ்சாப் மாநிலம் புலம்பெயர் இந்தியர்கள் விவகாரத் துறை அமைச்சர் குல்தீப் சிங் தலிவால், “இந்தியா இதை மிக முக்கியமாக எடுத்துக்கொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

மேலும், “இந்தியர்கள் அமெரிக்கா சென்றது தொழில் மற்றும் வாழ்வாதார தேடலுக்காகத்தான். அவர்களை இவ்வாறு அடிமைபோல கையில் விலங்குகள் பூட்டி அனுப்பியிருப்பது கேள்விக்குறியாகும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் 2வது முறையாக பதவியேற்றதிலிருந்து, குடியேற்றக் கொள்கைகள் மேலும் கடுமையடைந்துள்ளன. அவரது ஆட்சியில், சட்டவிரோத குடியேற்றங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இப்போது, இந்தியர்கள் உட்பட பல்வேறு நாடுகளின் குடியேறிகள், இந்த கொள்கையின் தாக்கத்தால் பாதிக்கப்படுகின்றனர்.

இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை அடுத்த வாரம் சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா இதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்துக் கொள்ளுமா, அல்லது இதை ஒரு சாதாரண விவகாரமாக கடந்து செல்லுமா என்பதுதான் அனைவரின் கவனமும் ஈர்க்கும் விடயம்.

இந்த 205 குடியேறிகளும் மிக மோசமான முறையில் அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் கைதிகள் போல் கட்டப்பட்டு, போதிய வசதிகள் இல்லாமல் இராணுவ விமானத்தில் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இது கண்டனத்திற்குரியதாக உள்ளதோடு, மனித உரிமை மீறல் என்றும் பார்க்கப்படுகிறது.

இந்தியாவுக்கு இது ஒரு பாரிய அவமானமாகவே கருதப்படுவதால், இந்திய அரசு இதற்கான சரியான பதிலடி கொடுக்குமா என்ற கேள்வியே பல தரப்பினரையும் பீடிக்கிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விஜய்யை வாழ்த்தியதால் அநுரவுக்கு வந்த சிக்கல்!

சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அனுர...

கோட்டாவின் கொடூர பழிவாங்கலுக்கு பரிகாரம்: ஷானி அபேசேகரவிற்கு பதவி உயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இயக்குநரான ஷானி அபேசேகரவை, காவல்துறை பிரதிப் பொலிஸ்...

இளம் மனைவியை காணவில்லையென கணவன் முறைப்பாடு!

யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காணவில்லை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்