திருகோணமலையில் அனைத்து மத உரிமைகள் பாதுகாப்பிற்கான அமைப்பினால் சுதந்திர தின நிகழ்வு

Date:

77வது சுதந்திரத்தினத்தை முன்னிட்டு திருகோணமலையில் அனைத்து மத உரிமைகள் பாதுகாப்பிற்கான அமைப்பினால் சுதந்திர தின நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

திருகோணமலையில் இயங்கி வரும் சிவில் அமைப்பான அனைத்து மதம் உரிமைகள் பாதுகாப்பதற்கான அமைப்பு, 2வது தடவையாக ஏற்பாடு செய்த சுதந்திர தின நிகழ்வு இன்று (04) காலை 10 மணி தொடக்கம் 12 மணி வரை திருகோணமலை பொது பஸ் நிலையத்துக்கு முன்னால் நடைபெற்றது.

இந் நிகழ்வின்போது, திருகோணமலை நகர மத்தியில் தேசியக்கொடி ஏற்றப்பட்டதுடன், குடிநீர் பானங்கள் மற்றும் சமைக்கப்பட்ட உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டதோடு, தேசிய கொடிகளும் வழங்கிவைக்கப்பட்டது.

இல்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர், 22ம் படைப்பிரிவின் மக்கள் தொடர்பு அதிகாரி கலந்து கொண்டதோடு, அனைத்து மதகுருமார்கள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்போடு இந்த நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

spot_imgspot_img

More like this
Related

புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள்: முதல்வர் ஸ்டாலின் அனுப்பி வைத்தார்

டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு தமிழகத்தில் இருந்து 950...

வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு

வட மாகாணத்தில் நிலவிய சீரற்ற காலநிலையால், பாதிக்கப்பட்ட கால்நடைகள் தொடர்பான விவரங்களைப்...

புதுக்குடியிருப்பு இளைஞனின் மரணத்துக்கு காரணம் கசிப்பா… அடியா?; சகோதரி சொன்னது உண்மையா?: பொலிசில் முறைப்பாடு!

சிறைச்சாலை திணைக்களம் தொடர்பில் அவதூறு ஏற்படுத்தி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார் என...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்