போதைப்பொருளை பிடிக்க புதிய தொலைபேசி இலக்கம்

Date:

நாட்டில் குற்றவாளிகள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற சட்டவிரோத செயற்பாடுகளை முறியடிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பை பெறும் நோக்கில், பொலிஸ் தலைமையகம் புதிய அவசர தொலைபேசி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

குற்றவாளிகள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்கள் தொடர்பான தகவல்களை பொலிஸாருக்கு வழங்குவதில் மக்களுக்கு ஏற்கனவே சந்தேகம் இருந்த நிலையில், தகவல் வழங்குபவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வகையில் புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, தகவல் அளிக்க விரும்பும் பொதுமக்கள் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல், குறித்த குற்றச் செயற்பாடுகள் குறித்து பொலிஸாருக்கு தெரிவிக்கலாம். இதற்காக, 1997 என்ற புதிய அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சேவை, குற்றச்செயல்களை குறைத்து, நாட்டில் சட்ட ஒழுங்கை பேணுவதற்கு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்தி, சமூகத்தில் நிலவும் சட்டவிரோத செயற்பாடுகளை முறியடிக்க பொலிஸாருக்கு உதவலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

வாசுதேவ நாணயக்கார இலங்கையின் இடதுசாரி அரசியல் வரலாற்றில் முக்கியமானவர் – பிரதமர் ஹரிணி

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார, இலங்கையின்...

கல்முனை பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற மீலாதுன் நபி கந்தூரி

மீலாதுன் நபி பெருவிழாவை சிறப்பிக்கும் வகையில் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய...

ஆலிம்களும் புத்திஜீவிகளும் சமூக வழிகாட்டலில் இணைந்து செயற்பட வேண்டும் — பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில்

ஆலிம்களும் சமூகத்தின் அறிவுசார் வளமாக விளங்கும் புத்திஜீவிகளும் இணைந்து செயற்பட்டு, சமகால...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்