பாடசாலை மட்டத்திலும் “க்ளீன் ஸ்ரீலங்கா” திட்டம்

Date:

அரசாங்கம் “க்ளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தை பாடசாலை மட்டத்திலும் முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளது. இதன் கீழ், கல்வித்துறையைச் சேர்ந்தவர்களை பயிற்றுவிப்பதற்கான நிகழ்ச்சி திட்டம் அண்மையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்றது.

சுகாதாரம், கழிவு முகாமைத்துவம், மாணவர்களின் நடத்தை மற்றும் ஒழுக்கம் ஆகியவை அடிப்படையாகக் கொண்டு இந்த நிகழ்ச்சி திட்டம் அமுல்படுத்தப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மாணவர்கள் சுத்தமாகவும் ஒழுங்காகவும் இருக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து அவர்களுக்கேற்ற பயிற்சிகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக, மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட கல்வித் துறையைச் சேர்ந்த பணியாளர்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்படுவதோடு, பள்ளிகளின் சூழலை தூய்மையாகவும், பராமரிப்புடன் வைத்திருக்கவும் இந்த திட்டம் முக்கிய பங்கு வகிக்கும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

டுபாயிலிருந்து ‘தூக்கிவரப்பட்ட’ கொடூரன்: வெடிகொளுத்தி கொண்டாடிய ஊர் மக்கள்!

டுபாயிலிருந்து தனது அடியாட்கள் மற்றும் கூலிப்படையினரைப் பயன்படுத்தி கொலைகள் மற்றும் மிரட்டிப்...

7 நடிகைகள், 9 அரசியல்வாதிகள், 13 சிறை உத்தியோகத்தர்களின் தரவுகள்: கெஹல்பத்தர பத்மேவின் தொலைபேசியில் வெளிப்பட்ட தகவல்கள்!

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில்...

சிரியா மீதான கடைசித்தடையையும் நீக்கியது அமெரிக்கா

திங்களன்று, அமெரிக்கா தனது பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் (SST) பட்டியலில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்