வவுனியா மாவட்டம், மகாறம்பைக்குளத்தில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
வவுனியா பொலிஸார் வழங்கிய தகவலின்படி, குறித்த துயரச் சம்பவம் நேற்றைய தினம் (01) இடம்பெற்றது. அநுராதபுரம், நிக்கவரெட்டி பகுதியை சேர்ந்த 30 வயதான இளைஞர், கோபுரத்தில் ஏறி திருத்தப்பணிகளை மேற்கொண்டு வந்தபோது நிலைதடுமாறி கீழே விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தின் போது அந்த தொழிலாளி பலத்த காயமடைந்த நிலையில் உடனடியாக வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தபோதிலும், அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த திடீர் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




