அம்பலாந்தோட்டையில் மூவர் வெட்டிக் கொலை

Date:

அம்பலாந்தோட்டையின் மூவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (02) இரவு 07.30 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்,

6 பேரின் குழு வீடொன்றிற்குள் நுழைந்து, அங்கிருந்த மூன்று பேரை வெட்டிக் கொன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 29, 34 மற்றும் 45 வயதுடையவர்கள் என்பது உறுதியாகியுள்ளது.

ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மற்ற இருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

இந்த கொலை சம்பவம், சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரிடையே நீண்டகாலமாக நிலவி வந்த தகராறு காரணமாக இடம்பெற்றது என பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

வவுனியா விபத்தில் 2 இளைஞர்கள் பலி

வவுனியா கனகராஜன்குளத்தில் சொகுசு கார் மோதியதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று (2)...

கொங்கோவில் 321 பேருக்கு எபோலா தொற்று

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் ஏற்பட்ட எபோலா பரவலில், 321 பேருக்கு எபோலா...

ஈரானின் உச்ச தலைவர் உயிருடன் இருக்கிறார்… தீவிரமாக செயற்படுகிறார்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர்!

அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களில் காயமடைந்து, பதவியேற்றதிலிருந்து பொதுவெளியில் காணப்படாத ஈரானின் உச்ச தலைவர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்