சுத்தமான மற்றும் ஆரோக்கியமான சூழலமைப்பை உருவாக்கும் நோக்கில், கிளீன் ஸ்ரீலங்கா (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் கீழ் இன்று (01) செங்கலடி பொது மயானம் சுத்தம் செய்யும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பல்வேறு சமூக ஆர்வலர்கள், உள்ளூராட்சி அதிகாரிகள், இளைஞர் குழுக்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து செயல்பட்டனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்ததென உணர்ந்து, பலர் தன்னார்வத்துடன் இதில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.






