திருகோணமலையில் விசேட தேவையுடையவர்களுக்கான மெய்வல்லுனர் போட்டி

Date:

திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், மாவட்ட விசேட தேவையுடையவர்களுக்கான வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகள் இன்று (30) திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன் தலைமையில் தி/இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் தம்பலகாமம், மூதூர், கிண்ணியா, கந்தளாய், பட்டினமும் சூழலும், வெருகல், கோமரன்கடவல மற்றும் குச்சவெளி ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட விசேட தேவையுடைய போட்டியாளர்கள் கலந்துகொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தினர். அவர்களின் இயலுமைக்கு ஏற்ப அனைத்து போட்டிகளில் உற்சாகமாக பங்கேற்று, வெற்றியை நோக்கி போட்டியிட்டனர்.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மேலதிக அரசாங்க அதிபர் சான்றிதழ்களையும் பரிசில்களையும் வழங்கி சிறப்பித்தார். மேலும், இந்நிகழ்வில் சமூக சேவைகள் மாவட்ட இணைப்பாளர் த.பிரணவன், பிரதேச செயலக சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விளையாட்டு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

திருமணமானவருடன் காதல்: ஆடைத்தொழிற்சாலை யுவதிக்கு நேர்ந்த பயங்கரம்!

கஹதுடுவ ஆடைத் தொழிற்சாலை ஊழியரான யுவதி, தொழிற்சாலையில் பணியாற்றும் ஒரு தொழிலாளியால்...

ஈரானிய கப்பலில் இருந்த 87 பேரின் சடலங்கள் மீட்பு!

இலங்கைக்கு அருகில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பலின் தாக்குதலில் மூழ்கிய ஈரானிய போர்க்...

இரண்டாம் உலகப்போரின் பின் இலங்கை கடற்கரையில் நடந்த சம்பவம்!

சனிக்கிழமை போரின் தொடக்கத்தில் இருந்ததை விட ஈரான் குறைவான ஏவுகணைகளை ஏவுகிறது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்