இந்திய பிரதமர் நரேந்திர மோடியைத் தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் வெள்ளை மாளிகைக்கு வருமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். இதற்கமைய, நெதன்யாகு அடுத்த வாரம் வெள்ளை மாளிகையில் ட்ரம்பை சந்திக்கவுள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதையடுத்து, அவரை சந்திக்க அழைப்பு பெறும் முதல் சர்வதேச தலைவர் நெதன்யாகுவாக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்குமுன்னதாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரும் பெப்ரவரி மாதம் வெள்ளை மாளிகையில் ட்ரம்பை சந்திக்கவுள்ளார். இது தொடர்பாக இருவரும் தொலைபேசி உரையாடல் நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.




