உள்ளூராட்சி தேர்தல் குறித்து அமைச்சரவை பேச்சாளர் வெளியிட்ட அறிவிப்பு சட்டத்திற்கு முரணானது – எம். நிஸாம் காரியப்பர்

Date:

ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என அமைச்சரவை பேச்சாளர் வெளியிட்ட அறிவிப்பு ஜனநாயகத்திற்கும் சட்டத்திற்கும் முரணானது என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம். நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையில், தற்போது பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விஷேட சட்டத்தின் அடிப்படையில், தேர்தலுக்கான வேட்பு மனு பெறப்படும் திகதியை அறிவிக்கும் முழு அதிகாரமும் தேர்தல் ஆணைக்குழுவிற்கும், அவர்களுக்கு கீழ் இயங்கும் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடினார்.

இச்சட்டம் அமுலாகும் திகதியிலிருந்து மூன்று மாதத்திற்குள் உள்ளூராட்சி தேர்தல் நடைபெற வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே, தேர்தல் ஆணைக்குழு அனைத்து அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன் கலந்தாலோசித்து தகுந்த ஒரு திகதியை அறிவிக்க வேண்டும்.

அரசாங்கத்திற்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட கட்சிக்கோ சாதகமாகத் தேர்தல் திகதி தீர்மானிக்கப்படுவது ஜனநாயகத்திற்கு எதிரான செயல் எனவும், அதனை தவிர்க்க வேண்டும் எனவும் நிஸாம் காரியப்பர் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கரூர்...

காதலனுடன் சேர்ந்து வருங்கால கணவரை கொன்றது எப்படி? – போலீஸாரிடம் நடித்துக் காட்டிய சியா கோயல்

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்​டேட் தொழில​திபர்...

பாதசாரி கடவையில் ரோஸ்மேரியை பந்தாடிய பிரதேசசெயலாளர்!

மாத்தறை பொது மருத்துவமனைக்கு முன்னால் உள்ள பாதசாரிகள் கடக்கும் வெள்ளைக்கோடு இடத்தில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்