இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 16 பேர் காயம்

Date:

மின்னேரிய வீதியின் 7வது மைல்கல் பகுதியில் இன்று (29) காலை 11 மணியளவில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 16 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தனியார் பேருந்தும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துமே குறித்த விபத்திற்குள்ளாகியுள்ளன.

குறித்த விபத்தில், இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் பயணித்த 12 பேரும், தனியார் பேருந்தில் பயணித்த 4 பேரும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் பொலன்னறுவை பொது மருத்துவமனை மற்றும் ஹபரணை பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் இரண்டு பேருந்துகளின் சாரதிகளும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்துக்குள்ளான தனியார் பேருந்து, கட்டுநாயக்காவில் இருந்து சிறிபுர பகுதியில் உள்ள மரண வீடொன்றுக்கு பயணித்துக் கொண்டிருந்ததாக விசாரணைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

டுபாயில் கைதுசெய்து அழைத்துவரப்பட்ட இந்தப் பெண் யார் தெரியுமா?

டுபாயில் இருந்து இரண்டு பாதாள உலக குற்றவாளிகளுடன் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட...

பேராதனை பல்கலை மாணவர்களை தாக்கிய நால்வர் கைது!

பேராதனை பகுதியில் உள்ளூர் இளைஞர்கள் குழுவுடன் ஏற்பட்ட மோதலில் பேராதனை பல்கலைக்கழக...

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

கரையோரப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜிந்துப்பிட்டி பிரதேசத்தில் நேற்று (16) இரவு இடம்பெற்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்