இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 16 பேர் காயம்

Date:

மின்னேரிய வீதியின் 7வது மைல்கல் பகுதியில் இன்று (29) காலை 11 மணியளவில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 16 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தனியார் பேருந்தும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துமே குறித்த விபத்திற்குள்ளாகியுள்ளன.

குறித்த விபத்தில், இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் பயணித்த 12 பேரும், தனியார் பேருந்தில் பயணித்த 4 பேரும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் பொலன்னறுவை பொது மருத்துவமனை மற்றும் ஹபரணை பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் இரண்டு பேருந்துகளின் சாரதிகளும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்துக்குள்ளான தனியார் பேருந்து, கட்டுநாயக்காவில் இருந்து சிறிபுர பகுதியில் உள்ள மரண வீடொன்றுக்கு பயணித்துக் கொண்டிருந்ததாக விசாரணைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

spot_imgspot_img

More like this
Related

வவுனியா மாநகர முதல்வரை பதவிநீக்கும் ஆளுனரின் வர்த்தமானிக்கு இடைக்கால தடை

வவுனியா மாநகரசபை முதல்வர் சு.காண்டீபனை அந்த பதவியிலிருந்தும், உள்ளூராட்சி உறுப்பினர் பதவியிலிருந்தும்...

ஈரான் உயர்மட்ட பேச்சுவார்த்தையாளர்களை கொல்ல இஸ்ரேல் சதித்திட்டம்: அமெரிக்கா எச்சரிக்கை!

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாஷிங்டன் தெஹ்ரானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தபோது, ​​ஈரானின் உயர்மட்டப்...

சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ வழக்கு பிற்பகல் வரை ஒத்திவைப்பு

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் புதல்வரான சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்