நுவரெலியாவில் சுற்றுலாப் பயணிகளுக்கான புதிய ஈர்ப்பிடம்

Date:

நுவரெலியாவின் சாந்திபுராவில் அமைந்துள்ள Eagle’s Viewpoint கண்காணிப்பு தளம், இன்று (26) அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட புதிய ஈர்ப்பிடமாக இது திகழ்கிறது.

இலங்கையின் கடல் மட்டத்திலிருந்து 6182 அடி உயரத்தில் அமைந்துள்ள, நாட்டின் மிக உயரமான கிராமமான சாந்திபுராவை சுற்றி இந்த பார்வை மேடையை விமானப்படை உருவாக்கியுள்ளது.

இந்நிகழ்வில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில், விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

சுற்றுலாத் துறையின் வளர்ச்சியின் மூலம் உள்ளூர் பொருளாதாரத்தின் அபிவிருத்திக்காக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக இலங்கையை ஒரு முக்கிய மற்றும் கவர்ச்சிகரமான இடமாக மாற்றும் முதன்மை நோக்கத்துடன் 2024 ஜூலை 31ம் திகதியன்று தொடங்கப்பட்ட இதன் கட்டுமானப் பணிகள் இலங்கை விமானப்படையின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டது.

மேலும், இதற்கான நிதி பங்களிப்பை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது

இரசிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு சாந்திபுராவின் காட்சியழகை அனுபவிக்க Eagle’s Viewpoint சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

யோஷிதவின் பாட்டியின் மனநிலை அறிக்கையை பெப்ரவரியில் சமர்ப்பிக்க உத்தரவு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல்...

அர்ஜூன, சகோதரர் மீது கொழும்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

முன்னாள் பெற்றோலிய அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் அப்போதைய இலங்கை பெற்றோலிய...

இறந்தவரின் உடலை சென்று பார்வையிட முடியாத நிலையில் மல்லாவி வைத்தியசாலையின் பிரேத அறை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு,துணுக்காய் ஆகிய இரு பிரதேச மக்களின் அரச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்