நல்லூர் இளம் கலைஞர் மன்றத்தின் புதிய கட்டிடத் திறப்பு விழா

Date:

புனரமைக்கப்பட்ட நல்லூர் இளம் கலைஞர் மன்றத்தின் புதிய கட்டிடத் திறப்பு விழா இன்று (25.01.2024) வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்த முக்கிய நிகழ்வு இளங்கலைஞர் மன்றத்தலைவரும் வடக்கு மாகாண அவைத்தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தலைமையில் கொண்டாடப்பட்டது.

விழாவின் முன்பாக, இளங்கலைஞர் மன்றத்திற்கு அருகிலுள்ள கொண்டலடி ஞானவைரவர் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து, விழாவின் பிரதம அதிதியாக கலந்து கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், புதிய கட்டிட தொகுதியை திறந்து வைத்தார்.

இவ்விழாவில் கௌரவ விருந்தினராக சிவபூமி அறக்கட்டளை தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன், இசைவானர் மு.கண்ணன் உள்ளிட்ட பல முக்கிய நபர்கள்கள் கலந்துகொண்டனர்.

மேலும், இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, ஈழத்தின் புகழ்பூத்த தவில் நாதஸ்வரக் கலைஞர்களின் விசேட நாதஸ்வர தவில் கச்சேரியும் நடைபெற்றது.

spot_imgspot_img

More like this
Related

கைதிலிருந்து தப்பிக்க நீதிமன்றம் சென்ற டிஐஜி வருண ஜெயசுந்தர

2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான தற்போதைய விசாரணைகள் தொடர்பாக,...

11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் வழக்கில் முன்னாள் கடற்படை தளபதி சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

கொழும்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 11 நபர்கள் கடத்தப்பட்டு காணாமல்...

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழந்துள்ளார். தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி -...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்