25.8 C
Jaffna
February 4, 2025
Pagetamil
உலகம்

ரஷ்யாவில் மாபெரும் ட்ரோன் தாக்குதல்

உக்ரைன், ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ உட்பட 13 பிராந்தியங்களை குறிவைத்து பாரிய ட்ரோன் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

சுமார் 121 ஆளில்லா விமானங்கள் பயன்பாட்டில் கொண்டு வரப்பட்ட இந்த தாக்குதலில், ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடாத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக, மாஸ்கோவில் அமைந்துள்ள எண்ணெய் ஆலையொன்றின் மீது குண்டுகள் வீசப்பட்டு, அந்த ஆலையில் தீவிபத்து ஏற்பட்டது. இதனால் பொருளாதார சேதம் ஏற்பட்டதுடன், உயிர் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், ரஷ்யாவின் ரியாசான், மாஸ்கோ உள்ளிட்ட 13 பிராந்தியங்களை இலக்காகக் கொண்ட ஆளில்லா விமானங்களை ரஷ்ய இராணுவம் இடைமறித்து சுட்டு வீழ்த்தியதாகவும், 121 ட்ரோன்களை அழித்ததாகவும் ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல், ரஷ்யா மீது உக்ரைன் மேற்கொண்ட மிகப்பெரிய தாக்குதல் எனும் வகையில் வரலாற்றில் முக்கியமானதாகக் கூறப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“Nudeify AI” தொழில்நுட்பங்களுக்கு தடையுத்தரவு

east tamil

போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல்

east tamil

சூடானில் 54 பேர் பலி

east tamil

அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து

east tamil

டிக்டொக்கால் இறந்த மகள்

east tamil

Leave a Comment