ஏறாவூர் பகுதியில் தனது நண்பியின் வீட்டிற்கு சென்ற 10 வயது சிறுமியை குறித்த நண்பியின் தந்தை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த வேளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமியின் தந்தையும் தாயும் வேறு திருமணம் செய்து, சிறுமியை கைவிட்டு பிரிந்து சென்றதனால், சிறுவர் நன்னடத்தை இல்லத்தில் வளர்ந்து வந்துள்ளார் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.
சிறுமியின் நிலைமை குறித்து மேலும் தகவல்கள் சேகரிக்கப்படுவதாகவும், வழக்கு சட்டரீதியாக முன்னெடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



