வடமராட்சி மக்களுக்கு புதிய உதவிகள்

Date:

சன்மார்க்கா அமைப்பின் நிறுவுனர் பகீரதன் மற்றும் Forum for Rural Income and Environmental Development Services நிறுவனத்தின் தலைவர், வடமராட்சி கிழக்கிலுள்ள போக்கறுப்பு, முள்ளியான், வெற்றிலைக்கேணி ஆகிய கிராம சேவகர் பிரிவுகளின் கீழ் உள்ள கேவில், வேதகுளம், நித்தியவெட்டை, கட்டைக்காடு மற்றும் வெற்றிலைக்கேணி ஆகிய கிராமங்களுக்கு சென்று மக்களின் சுயதொழில்களை கண்காணித்தனர்.

இந்த விஜயத்தின் போது, சுயதொழில் சமூக அமைப்பின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட பல திட்டங்கள் மற்றும் மக்களின் தொழில்நிலை குறித்து கண்காணிப்பு நடைபெற்றது. ஆரம்ப கட்டமாக ஒவ்வொரு கிராமத்திலும் 25 முதல் 30 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கான தொழில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. மேலும், பயிற்சிகளின் தொடர்ச்சியாக, நன்கொடையாக ரூ.20,000 மற்றும் வட்டியில்லா கடனாக ரூ.25,000 வழங்கப்பட்டு, சுயதொழில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த முயற்சிகள் வடமராட்சிப் பகுதி மக்களின் வாழ்க்கைமுறை மேம்பாடு மற்றும் சுயதொழில்முறை திறன் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக அமையவுள்ளது

Share post:

spot_imgspot_img

More like this
Related

மன்னார் கடலில் சிக்கிய படகில் ஹஷிஷ் போதைப்பொருள்

மன்னார் தெற்கு கடலில் கையப்படுத்தப்பட்ட டிங்கி படகில் ஹஷிஷ் போதைப்பொருள் இருந்தமை...

வவுனியாவில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட இளம்ஜோடி கைது!

வவுனியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவம் தொடர்பில் கணவன் மனைவி...

தம்பதி கொலை: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிசார்!

வெள்ளிக்கிழமை மாலை தலங்கம, அக்குரேகொடவில் வாகனத்திற்குள் ஒரு தம்பதியைக் கொன்ற துப்பாக்கிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்