TikTok ஊடாக காதலித்த காதலியை தேடி வந்த இளைஞர்: பொலிஸாரால் கைது

Date:

TikTok வழியாகத் தொடங்கிய காதல், திருகோணமலை பிரதேச இளைஞர் ஒருவரையும் பசுமலை பிரதேச பாடசாலை மாணவியையும் இணைத்துள்ளது. இந்த காதல் உணர்வில் சிக்கிய இளைஞர், தனது காதலியை நேரில் பார்க்கும் ஆசையில், பசுமலை பிரதேசத்திலுள்ள மாணவியின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அப்பகுதியில் வேற்றார் போல காணப்பட்ட இளைஞர் தொடர்பாக பொதுமக்களிடையே சந்தேகம் உருவாகியதால், உடனே அவர்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார், குறித்த இளைஞரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையின் போது, ஏன் இங்கு வந்ததற்கான அனைத்து காரணங்களையும் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். அத்தோடு குறித்த நபரிடம் அடையாள அட்டை ஏனைய எந்த ஒரு தகவல்களும் இல்லாத காரணத்தினால் பொலிஸார் நேற்று (23) அவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

இளைஞர், இன்று (24) நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். TikTok காதல் விவகாரம் இவ்வாறு காவல்துறை விசாரணையால் முடிந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

வெளிநாட்டுக்கு தப்பியோடிய நீதிமன்ற உத்தியோகத்தர்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான சலிந்து மல்சித...

நாமலுக்கு விளக்கமறியல்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை...

மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்த விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு

மட்க்களப்பு கிரான்குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி பாரிய அலையில் சிக்கி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்