பொலிஸ் நிலையத்தை மீட்ட குகதாசன்

Date:

மூதூர் மேன்காமம் பகுதியில், முன்னதாக மேன்காமம் பொலிஸ் நிலையமாக பயன்படுத்தப்பட்ட கிராம அபிவிருத்திச் சங்க கட்டடம், 15 ஆண்டுகளுக்குப் பின்னர் மக்களின் பயன்பாட்டிற்காக பொலிஸாரால் மக்களிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த கட்டடம் 15 ஆண்டுகளாக எந்தவித கொடுப்பனவுமின்றி பொலிஸ் நிலையமாக செயல்பட்டு வந்தது. 2025 ஜனவரி 17 அன்று நடைபெற்ற மூதூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் குறித்த கட்டடத்தை மக்களின் பயன்பாட்டிற்காக மீள வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்.

இக் கட்டடம் ஆரம்பத்தில் தாய்-சேய் பராமரிப்பு நிலையமாகவும், நூலகம் உள்ளிட்ட பல தேவைகளுக்காக அமைக்கப்பட்டதாக இருந்தது. ஆனால், அவசர தேவை காரணமாக பொலிஸ் நிலையத்திற்கு ஒதுக்கப்பட்டது. இதனால் மக்கள் பொதுக்கட்டட வசதிகளை இழந்து சிரமப்பட்டனர்.

கட்டடத்தை மீள மக்களுக்கு வழங்க கோரி, 2020 பெப்ரவரியில் மக்கள் கடித மூலமாக கோரிக்கை செய்திருந்த போதிக்கும் இதற்கான பலன் ஏதும் கிடைக்காத நிலையில், கடந்த 17ம் திகதி நடைபெற்ற மூதூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் அவர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, பிரதேச செயலகம் மற்றும் பொலிஸ்மா அதிபர் உட்பட அதனுடன் தொடர்புடைய தரப்புகளின் அனுமதியுடன், கட்டடம் மக்களின் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டது.

இது மேன்காமம் கிராம மக்களுக்கு தேவையான சேவைகளுக்கான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

spot_imgspot_img

More like this
Related

விசாரணை நாட்களில் நீதிமன்றம் வந்து விட்டு, ஏனைய நாட்களில் ஊர் சுற்றலாம்: நாமலை கலாய்த்த அமைச்சர்!

எதிர்க்கட்சி அரசியல்வாதியான நாமல் ராஜபக்ச, திட்டமிடப்பட்ட திகதிகளில் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும்...

இலங்கையில் 25% தனியார் பேருந்துகள் மண்ணெண்ணெயிலேயே இயங்குகின்றன!

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெமுனு விஜேரத்ன, நாட்டின்...

அமெரிக்கா- ஈரான் ஒப்பந்தத்தின் 14 அம்ச உள்ளடக்கம் இதுதான்!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படும் 14 அம்ச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்