புறக்கோட்டையில் சட்டவிரோத மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்

Date:

புறக்கோட்டை கதிரேசன் வீதியில் அமைந்துள்ள அழகுசாதனப் பொருட்கள் விற்பனை நிலையமொன்று, உரிய ஆவணங்களின்றி தரமற்ற மருந்துகள் மற்றும் சருமத்தை வெண்மையாக்கும் பொருட்களை விற்பனை செய்ததாக நுகர்வோர் விவகார அதிகார சபையினரால் நேற்று சோதனைக்குட்படுத்தப்பட்டது.

சோதனையின் போது, சட்ட விரோதமாக விற்பனைக்காக வைத்திருந்த மருந்துகள் மற்றும் சருமத்தை வெண்மையாக்கும் கிறீம் வகைகள் கைப்பற்றப்பட்டதோடு, அனுமதியின்றி விற்பனை செய்யப்பட்டு வந்த பொருட்கள் அனைத்தும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.

கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக விசாரணைக்காக அதிகாரிகளால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

குறித்த விற்பனை நிலையத்தின் உரிமையாளருக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.

இச்சம்பவம், பொதுமக்களின் மற்றும் நலனை உறுதிசெய்யும் நோக்கில் அதிகாரிகள் மேற்கொண்ட தகுதியான நடவடிக்கையாகும். தவறான மற்றும் தரமற்ற பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளை தவிர்க்க, மக்களும் விழிப்புடன் செயல்பட வேண்டியது அவசியமாகின்றது.

இந்த சம்பவம், சந்தையில் தரமற்ற பொருட்கள் விற்பனை செய்யும் செயல்களுக்கு எதிராக அரசாங்கம் கடுமையாக நடவடிக்கை எடுக்கும் என்பதை வெளிக்காட்டிநிற்கின்றது.

spot_imgspot_img

More like this
Related

விசாரணை நாட்களில் நீதிமன்றம் வந்து விட்டு, ஏனைய நாட்களில் ஊர் சுற்றலாம்: நாமலை கலாய்த்த அமைச்சர்!

எதிர்க்கட்சி அரசியல்வாதியான நாமல் ராஜபக்ச, திட்டமிடப்பட்ட திகதிகளில் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும்...

இலங்கையில் 25% தனியார் பேருந்துகள் மண்ணெண்ணெயிலேயே இயங்குகின்றன!

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெமுனு விஜேரத்ன, நாட்டின்...

அமெரிக்கா- ஈரான் ஒப்பந்தத்தின் 14 அம்ச உள்ளடக்கம் இதுதான்!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படும் 14 அம்ச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்