25.5 C
Jaffna
February 2, 2025
Pagetamil
இலங்கை

புறக்கோட்டையில் சட்டவிரோத மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்

புறக்கோட்டை கதிரேசன் வீதியில் அமைந்துள்ள அழகுசாதனப் பொருட்கள் விற்பனை நிலையமொன்று, உரிய ஆவணங்களின்றி தரமற்ற மருந்துகள் மற்றும் சருமத்தை வெண்மையாக்கும் பொருட்களை விற்பனை செய்ததாக நுகர்வோர் விவகார அதிகார சபையினரால் நேற்று சோதனைக்குட்படுத்தப்பட்டது.

சோதனையின் போது, சட்ட விரோதமாக விற்பனைக்காக வைத்திருந்த மருந்துகள் மற்றும் சருமத்தை வெண்மையாக்கும் கிறீம் வகைகள் கைப்பற்றப்பட்டதோடு, அனுமதியின்றி விற்பனை செய்யப்பட்டு வந்த பொருட்கள் அனைத்தும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.

கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக விசாரணைக்காக அதிகாரிகளால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

குறித்த விற்பனை நிலையத்தின் உரிமையாளருக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.

இச்சம்பவம், பொதுமக்களின் மற்றும் நலனை உறுதிசெய்யும் நோக்கில் அதிகாரிகள் மேற்கொண்ட தகுதியான நடவடிக்கையாகும். தவறான மற்றும் தரமற்ற பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளை தவிர்க்க, மக்களும் விழிப்புடன் செயல்பட வேண்டியது அவசியமாகின்றது.

இந்த சம்பவம், சந்தையில் தரமற்ற பொருட்கள் விற்பனை செய்யும் செயல்களுக்கு எதிராக அரசாங்கம் கடுமையாக நடவடிக்கை எடுக்கும் என்பதை வெளிக்காட்டிநிற்கின்றது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

போதைப்பொருளை பிடிக்க புதிய தொலைபேசி இலக்கம்

east tamil

கோயிலை புனரமைப்பு செய்தவர் தூண் விழுந்து மரணம்

east tamil

தொலைத்தொடர்பு கோபுரத்திலிருந்து விழுந்து ஒருவர் பலி

east tamil

புதிய வகை யானை வேலி கண்டுபிடிப்பு

east tamil

பொருளாதார நெருக்கடியை தடுக்கவே இறக்குமதி வரி – ஜனாதிபதி

east tamil

Leave a Comment